/* */

மின் விசிறியில் தூக்கிட்டு சி.ஐ.எஸ்.எப்., காவலர் தற்கொலை

புதுவண்ணாரப்பேட்டையில், மின் விசிறியில் தூக்கிட்டு சி.ஐ.எஸ்.எப்., காவலர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

HIGHLIGHTS

மின் விசிறியில் தூக்கிட்டு சி.ஐ.எஸ்.எப்., காவலர் தற்கொலை
X

சென்னை புதுவண்ணாரப்பேட்டை, துறைமுக குடியிருப்பைச் சேர்ந்தவர் மகேந்திர குமார், 28. இவர், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர். மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காவலராக பணியாற்றினார். உயர்நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தார்.

இவரின் அறையில், மகேந்திர குமார் உட்பட மூன்று பேர் தங்கியுள்ளனர். நேற்று, மற்ற இரு காவலர்கள் பணிக்கு சென்று விட்டதால், மகேந்திர குமார் மட்டும் தனியாக இருந்தார்.பணி முடிந்து காவலர்கள் வீட்டிற்கு வந்த போது, வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது. பால்கனி வழியாக சென்று ஜன்னலை திறக்க முயற்சித்த போது, உள்பக்கம் பூட்டப்பட்டு இருந்தது. இவர்கள் அளித்த தகவலின்படி வந்த புது வண்ணாரப்பேட்டை போலீசார், பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, மின் விசிறியில் துாக்கிட்டு மகேந்திர குமார் இறந்தது தெரிந்தது.போலீசார் அவரின் உடலைக் கைப்பற்றி, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்

Updated On: 21 Sep 2021 1:06 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?