/* */

சென்னை: ராயபுரத்தில் விதிகளை மீறி செயல்பட்ட இறைச்சி குடோனுக்கு சீல்!

சென்னை ராயபுரத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட இறைச்சி குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

சென்னை: ராயபுரத்தில் விதிகளை மீறி செயல்பட்ட இறைச்சி குடோனுக்கு சீல்!
X

பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டு இறைச்சி.

தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்ததை தொடர்ந்து முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுளளது. கூட்டம் கூடுவதை தவிர்க்க அனைத்து கடைகளும் திறக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை ராயபுரத்திற்கு உட்பட்ட சிதம்பரம் நகர் பகுதிகளில் தடையை மீறி ஆடுகள் வெட்டப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சுகாதார ஆய்வாளர் தலைமையிலான அதிகாரிகள், கதவை திறந்து பார்த்தபோது சுமார் 10 க்கும் அதிகமான சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான ஆடுகள் வெட்டப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து ராயபுரம் மண்டலம் சுகாதார பிரிவு அதிகாரிகள் முழு ஊரடங்கு தடையை மீறி செயல்பட்ட ஜேஎன்எஸ் டிரேடர்ஸ் நிறுவனத்திற்கு சீல் வைத்து சுமார் 100 கிலோ எடை கொண்ட ஆட்டு இறைச்சியை பறிமுதல் செய்தனர்.

Updated On: 2 Jun 2021 2:08 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    எஸ்.வாழவந்தி செல்லாண்டியம்மன் கோயில் தேர்த்திருவிழா: திரளான பக்தர்கள்...
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. தேனி
    அரசு மருத்துவமனையின் அவலம்! இங்கில்ல… மத்திய பிரதேசத்தில்…!
  5. தேனி
    அம்பானி, அதானியிடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? பிரதமர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. திருவண்ணாமலை
    இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் நிலம் மீட்பு!
  8. இந்தியா
    சபரிமலையில் 'ஸ்பாட் புக்கிங்' வசதி ரத்து!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு