விலைப்பட்டியல் வைத்து, பில் தரவேண்டும்: டாஸ்மாக் கடைகளுக்கு உத்தரவு.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் விலைப்பட்டியல் வைக்கவும், ரசீது தர மேலாண் இயக்குனர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் விலைப்பட்டியல் வைக்கவும், ரசீது தர வேண்டுமென மேலாண்மை இயக்குனர் சுற்றறிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று இதுகுறித்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குனர் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விலைப்பட்டியல் வைக்கப்பட வேண்டும் என்றும், மதுபானங்களுக்கு உரிய ரசீது வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டார். மேலும் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவது தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture