/* */

கல்லூரிகளுக்கு பேராசிரியர்கள் வரக்கூடாது: தமிழக அரசு எச்சரிக்கை

பேராசிரியர்களை கல்லூரிகளுக்கு நேரில் வரவழைக்கக் கூடாது என்று, கல்லூரி நிர்வாகங்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

HIGHLIGHTS

கல்லூரிகளுக்கு பேராசிரியர்கள் வரக்கூடாது:  தமிழக அரசு எச்சரிக்கை
X

தமிழகத்தில் அரசின் உத்தரவை மீறி பெரும்பாலான கல்லூரிகள், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு எடுப்பதற்காக பேராசிரியர்களை, கல்லூரிகளுக்கு நேரில் வரவழைப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு, கல்லூரிக் கல்வி இயக்ககம் விடுத்துள்ள எச்சரிக்கையில், ஆன்லைன் வகுப்பு எடுக்கவோ, NAAC சார்ந்த பணிகள் அல்லது இதர பணிகளுக்காக பேராசிரியர்களை, கல்லூரிகளுக்கு நேரில் வரவழைக்கக் கூடாது.

மேலும், கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, கல்லூரிக்கு வருமாறு பேராசிரியர்களுக்கு அழுத்தம் தருவதை இனி தவிர்க்க வேண்டும். கொரோனா கட்டுப்பாடுகல் தொடர்பான அரசின் உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று, தமிழக அரசின் கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது.

Updated On: 1 May 2021 2:39 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?