/* */

காலியாக உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் பணி விரைவில் நிரப்பப்படும், அமைச்சர் தகவல்

தமிழகத்தில் காலியாக உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் பணி விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் ஐ .பெரியசாமி தெரிவித்தார்.

HIGHLIGHTS

காலியாக உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் பணி விரைவில் நிரப்பப்படும், அமைச்சர் தகவல்
X

அமைச்சர் ஐ. பெரியாசாமி 

கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ பெரியசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள ரேஷன் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் அப்போது அங்கு பணியில் இருந்த பெண் ஊழியரிடம் ரேஷன் கடையில் வழங்கப்படுகின்ற பொருட்களின் தரம் குறித்தும் எத்தனை கார்டுகளுக்கு வழங்கப்படுகிறது என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

தொடர்ந்து ரேஷன் கடையில் கூடிய ஆவணங்களையும் பயோமெட்ரிக் மெஷினையும் ஆய்வு செய்தார்.. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஐ.பெரியசாமி கூறியதாவது.

தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்து அவ்வப்போது ஆய்வு செய்து வருவதாகும் அதன் அடிப்படையிலேயே தற்போதைய திடீர் ஆய்வு செய்ததாகவும் தெரிவித்த அவர்

தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து நியாய விலைக்கடைகளிலும் காலி பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என்றும்,

மாத கடைசி வரை ரேஷன் கடையில் பொதுமக்களுக்கான பொருட்கள் வினியோகம் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்..

Updated On: 27 July 2021 2:30 AM GMT

Related News