/* */

மத்தியஅரசிடம் தமிழக பாஜகவினர் தடுப்பூசியை பெற்றுத்தரவேண்டும்: அமைச்சர்

மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசிகளை தமிழக பாஜகவினர் பெற்றுத்தர வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் கேட்டுக்கொண்டார்.

HIGHLIGHTS

மத்தியஅரசிடம் தமிழக பாஜகவினர் தடுப்பூசியை பெற்றுத்தரவேண்டும்: அமைச்சர்
X

அமைச்சர் மாசுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது.

சென்னை ஓட்டேரியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர், அத்தியாவசிய பொருட்களை வாகங்னங்கள் மூலம் வீடு தேடி சென்று விற்பனை செய்யும் திட்டத்தை சென்னை ஓட்டேரியில் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் வடசென்னை எம்.பி. கலநிதி வீராசாமி, மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் 7500 நடமாடும் மளிகை பொருட்கள் விற்பனைக்கு திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது வரை 2197 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்றார்.

இதனை தொடர்ந்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசியை இதுவரை 83லட்சம் பேர் செலுத்திக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் தடுப்பூசி செலுத்திக்கொள்பவரின் எண்ணிக்கை 2 மடங்காக உயர்ந்துள்ளது. தற்போது தமிழக அரசிடம் 5 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது.

கோவையில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வானதி சீனிவாசன் தெரிவிக்கிறார். அப்படி இல்லை. தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசிடம் இருந்து தமிழக பா.ஜ.க.வினர் பெற்றுத்தர வேண்டும். தடுப்பூசி செலுத்துவதில் திமுகவினர் தலையீடு எங்கேயும் இல்லை. அப்படி இருந்தால் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்று கூறினார்.

Updated On: 31 May 2021 1:21 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  2. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  3. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  4. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  5. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  6. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  7. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  8. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்
  9. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  10. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...