/* */

பெரம்பூரில் 1500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - ஒருவர் கைது

சென்னை, பெரம்பூரில் 1500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது;இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

பெரம்பூரில் 1500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - ஒருவர் கைது
X

ரேஷன் அரிசியுடன் கைதானவர். 

சென்னை, பெரம்பூர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் முக்கேஷ்ராவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்தன் தலைமையிலான குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார், பெரம்பூர் பிபி ரோடு சுடுகாடு அருகே வாகனச்சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த மினி வேன் ஒன்றை மடக்கி சோதனை செய்தனர். அதில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த வாகனத்தை ஓட்டி வந்த பெரம்பூர் நாகவல்லி அம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் 38 என்ற நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 18 Feb 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    எஸ்.வாழவந்தி செல்லாண்டியம்மன் கோயில் தேர்த்திருவிழா: திரளான பக்தர்கள்...
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. தேனி
    அரசு மருத்துவமனையின் அவலம்! இங்கில்ல… மத்திய பிரதேசத்தில்…!
  5. தேனி
    அம்பானி, அதானியிடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? பிரதமர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. திருவண்ணாமலை
    இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் நிலம் மீட்பு!
  8. இந்தியா
    சபரிமலையில் 'ஸ்பாட் புக்கிங்' வசதி ரத்து!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு