/* */

சென்னையில் பணி நிரந்தரம் செய்யக்கோரி செவிலியர்கள் தொடர் உண்ணாவிரதம்

பணி நிரந்தரம் செய்யக்கோரி, சென்னை தேனாம்பேட்டையில் செவிலியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

HIGHLIGHTS

சென்னையில் பணி நிரந்தரம் செய்யக்கோரி செவிலியர்கள் தொடர் உண்ணாவிரதம்
X

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்க வளாகத்தில், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள்.

கொரோனா தொற்றின் போது கூடுதல் பணிக்காக, மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில், 2020ஆம் ஆண்டு மே மாதம் முதல், செவிலியர்கள் தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர். திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் 1,212 ஒப்பந்த முறை செவிலியர்களை பணி நியமனம் செய்தது. மீதமுள்ள 3,485 செவிலியர்கள் பணிநியமனம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கடந்த 2 மாதங்களில் தற்காலிகமாக பணி நியமனம் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான செவிலியர்கள், பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். உணவு தங்கும் வசதி ரத்து செய்யப்பட்டுள்ளன. அரசு அறிவித்த ஊக்கத்தொகையும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், இதில், கொரோனா பேரிடர் காலத்தில் உயிரை துச்சமென்று நினைத்து உழைத்த தங்களை, உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, தொடர் உள்ளிருப்பு போராட்டம், மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில், செவிலியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 28 Sep 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  3. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  5. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி மே.20ல் துவக்கம்
  6. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  7. காஞ்சிபுரம்
    ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்மமான முறையில் எரிந்த இரண்டு ஜேசிபி...
  8. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே லாரி டிரைவரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த தம்பி
  10. மதுரை மாநகர்
    மதுரை மாட்டுத்தாவணி காய் கனி வியாபாரிகள் பொதுக் குழுக் கூட்டம்..!