/* */

ஊழியர்களுக்கு கொரோனா சரவணா ஸ்டோர்ஸ் கடை மூடப்பட்டது

சென்னை புரசைவாக்கம் சரவணா ஸ்டோர்ஸின் 39 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதால் கடை மூடப்பட்டது

HIGHLIGHTS

ஊழியர்களுக்கு கொரோனா சரவணா ஸ்டோர்ஸ் கடை மூடப்பட்டது
X

சென்னை புரசைவாக்கம் கரியப்பா தெருவிலுள்ள சரவணா ஸ்டோர்ஸின் பணியில் உள்ள 39 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, கடை மூடப்பட்டு சாலை முழுவதும் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: "தங்குமிடத்திலிருந்து தான் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், தங்குமிடமும், கடையும் ஒரே கட்டடத்தில் இருப்பதால் கடையும் மூடப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை 166 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அதில் 13 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. சனிக்கிழமை எடுக்கப்பட்ட 159 மாதிரிகளில் 26 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதியானது. அனைத்து ஊழியர்களும் இளைஞர்களாக இருக்கின்றனர். சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை. இருப்பினும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 19 April 2021 1:10 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!