/* */

சென்னை காமராஜர் சிலைக்கு த.மா.கா கட்சி தலைவர் ஜி.கே.வாசன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்

சென்னையில் உள்ள காமராஜர் சிலைக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

HIGHLIGHTS

சென்னை காமராஜர் சிலைக்கு த.மா.கா கட்சி தலைவர் ஜி.கே.வாசன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்
X

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் (பைல் படம்)

காமராஜரின் 119 வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு கீழ் வைக்கப்பட்ட உருவப்படத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் மலர் தூவி மரியாதை செலுத்தினார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது.

காமராஜர் பிறந்த நாளை, நகரம் முதல் கிராமம் வரை கொரோனாவிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய நாளாகவும், பொதுமக்களுக்கு முககவசம் வழங்கி மத்திய மாநில அரசுகளின் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தி மூன்றாவது அலையை தடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டு வருகிறோம்

பொதுமக்களுக்கு தங்குதடையின்றி தாமதமில்லாமல் தடுப்பூசி போடுவதற்காக வழிகளை ஏற்படுத்த வேண்டும்.

மேகதாது அணை கட்டுவதை தடுக்க வேண்டும்.இது தமிழகத்தின் ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சனை .மேகதாது தொடர்பாக தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி துணை நிற்கிறது.

வரும் காலங்களில் அனைத்துக் கட்சிக் கூட்டம் என்றால் அனைத்து கட்சிகளையும் அழைக்க வேண்டும். விவசாயம் சார்ந்த பிரச்சனைகளுக்கு விவசாய பிரதிநிதிகளை அழைக்க வேண்டும் என்றார்.

கொங்கு நாடு குறித்த கேள்விக்கு வளமான தமிழ்நாடு வலிமையான இந்தியா என்பதுதான் தமிழ் மாநில காங்கிரஸின் நிலைப்பாடு என தெரிவித்தார்.

Updated On: 15 July 2021 4:53 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு