/* */

ஊரடங்கில் போட்டோ ஸ்டுடியோக்களை திறக்க வேண்டும்: ம.நீ.ம பொன்னுசாமி வேண்டுகோள்

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் போட்டோ ஸ்டுடியோக்களை திறக்க உத்தரவிட வேண்டும் என அரசுக்கு மக்கள் நீதி மையம் கட்சியின் தொழிலாளர் நல அணி மாநில செயலாளர் பொன்னுசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

ஊரடங்கில் போட்டோ ஸ்டுடியோக்களை திறக்க வேண்டும்: ம.நீ.ம பொன்னுசாமி வேண்டுகோள்
X

ஊரடங்கு காலத்தில் போட்டோ ஸ்டுடியோவை திறக்க அனுமதிக்க வேண்டும் என ம.நீ.ம. நிர்வாகி பொன்னுசாமி.

.இது குறித்து அவர் வெளியிட்ட கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது

கொரோனா நோய் தொற்று காரணமாக தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்ட தளர்வுகளற்ற, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கினால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திருமணம், பிறந்த நாள் விழா மற்றும் மத வழிபாட்டு ஸ்தலங்களில் நடைபெறும் விழாக்கள் பெரிய அளவில் நடைபெறுவது முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுள்ளது.

விழாக்களை பெரியளவில் வாழ்வாதாரமாக கொண்டுள்ள புகைப்பட கலைஞர்கள், வீடியோகிராபர்கள் மற்றும் அவர்களை சார்ந்துள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்திருக்கின்றனர்.

வங்கி கடன், கடை வாடகை, மின்கட்டணம் உள்ளிட்டவற்றை செலுத்த முடியாமலும் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் நடப்பில் உள்ள ஊரடங்கில் கடந்த சில வாரங்களாக கடைகளை திறக்க பல்வேறு நிலைகளில் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்துள்ள போதிலும் போட்டோ ஸ்டுடியோக்களை திறக்க தளர்வுகள் அளிக்காமல் இருப்பது அத்தொழிலை மட்டுமே நம்பியுள்ளோருக்கு மிகுந்த மன உளைச்சலையும், நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே கொரோனா நோய் தொற்று காரணமான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் புகைப்படக் கலைஞர்கள், ஒளிப்பதிவு கலைஞர்கள் மற்றும் அவர்களை சார்ந்துள்ள லட்சக்கணக்கான தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டதமிழகம் முழுவதும் போட்டோ ஸ்டுடியோக்களை உடனடியாக திறக்க அனுமதிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Updated On: 18 Jun 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  3. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  4. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு
  7. பொன்னேரி
    பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
  8. வீடியோ
    🔴LIVE : 16 ஆண்டுகளுக்கு பின் come back Action Hero-வாக நடித்து...
  9. கும்மிடிப்பூண்டி
    பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
  10. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்