/* */

சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் அறுபத்து மூவர் விழா

சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் அறுபத்து மூவர் விழா
X

சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் அறுபத்து மூவர் விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி மாதப் பெருவிழா, 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 3ம் நாள் அதிகார நந்தி சேவையும், ஏழாம் நாள் தேர்த் திருவிழாவும் நடந்தது.விழாவின் பிரதான நாளான நேற்று, அறுபத்து மூவர் திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு காலை, திருஞான சம்பந்தர் எழுந்தருளல், என்பை பூம்பாவையாக்கி அருளல் நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளிய கபாலீஸ்வரர், கோபுர தரிசனம் கொடுத்து, 63 நாயன்மார்களுடன் காட்சியளித்தார்.

பின், வெள்ளித் தேரில் கபாலீஸ்வரர் முன் செல்ல, 63 நாயன்மார்களும் பின்தொடர்ந்தனர்.இதில், மயிலாப்பூரைச் சேர்ந்த பிரதான கோவில்களின் உற்சவ மூர்த்திகளும் பங்கேற்றனர். இரவு, சந்திரசேகரர் பார்வை வேட்டை விழாவும், ஐந்திரு மேனிகள் விழாவும் நடந்தது.இம்முறை கொரோனா தொற்று காரணமாக அன்னதானத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

Updated On: 27 March 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  4. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  8. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்