/* */

மதுரவாயலில் ₹ 9 லட்சம் மோசடி செய்த பெண் கைது

மதுரவாயலில் ரூ 9 லட்சம் மோசடி செய்த பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

மதுரவாயலில் ₹ 9 லட்சம் மோசடி செய்த பெண் கைது
X

மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட பெண்.

சென்னை மதுரவாயல், கணபதி நகரை சேர்ந்தவர் ரங்கநாதன்(39), இவர் மதுரவாயல் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம், ஆண்டாள் நகரை சேர்ந்த செல்வி(42), என்பவர் அவரது மகனின் படிப்பிற்காக ரூ.3 1/2 லட்சம் பணம் வாங்கினார்.

ஆனால் வாங்கிய பணத்தை இதுவரை தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந்ததாகவும் அந்தப் பணத்தை திருப்பி வாங்கித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்து இருந்தார்.

மேலும் செலவி இதே போல் அந்த பகுதியில் உள்ள பல பேரிடம் அரசு ஒதுக்கீடு செய்யும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் வாங்கி தருவதாகவும், ஏல சீட்டு நடத்தியும் பலரிடம் பணம் பெற்று தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.

இதுவரை சுமார் ரூ.9 லட்சம் வரை பணம் மோசடி செய்திருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் மதுரவாயல் போலீசில் புகார் அளித்திருந்தனர். இந்த புகாரின் பேரில் மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த செல்வியை தேடி வந்த நிலையில் நேற்று செல்வியை மதுரவாயல் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 11 Jan 2022 2:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  2. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்
  4. இந்தியா
    டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு
  5. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  6. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  7. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  8. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  9. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  10. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்