சென்னை மதுரவாயலில் குடிநீர் குழாய் உடைப்பு- பொதுமக்கள் அவதி
![சென்னை மதுரவாயலில் குடிநீர் குழாய் உடைப்பு- பொதுமக்கள் அவதி சென்னை மதுரவாயலில் குடிநீர் குழாய் உடைப்பு- பொதுமக்கள் அவதி](https://www.nativenews.in/h-upload/2021/09/19/1305762-img20210918102434.webp)
மதுரவாயல் கார்த்திகேயன் நகரில் சேதமடைந்த குடிநீர் குழாய்.
By - C.Pandi, Reporter |19 Sep 2021 6:15 AM GMT
சென்னை மதுரவாயலில் வளசரவாக்கம் பகுதிக்கு செல்லும் குடிநீர் குழாய் பழுதாகி, சாலை ஓரங்களில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
சென்னை மதுரவாயல் கார்த்திகேயன் நகரில், வளசரவாக்கம் பகுதியில் குழாய் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதில், குடிநீர் செல்லும் குழாய் பழுதாகி சேதமடைந்தது.
இதனால், குழாயில் இருந்து தண்ணீர் வெளியேறியது. சாலை முழுவதும் தண்ணீர் வெள்ளம் போல் சூழந்து காணப்பட்டது. இதனால் இவ்வழியாக சென்ற பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினார். சென்னை குடிநீர் வாரிய ஊழியர்கள் பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு சரி செய்தனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu