/* */

உணவகங்களில் பார்சல் உணவுக்கு சேவை வரி வசூலிக்க கூடாது - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

உணவகங்களில் பார்சல் உணவுக்கு சேவை வரி வசூலிக்க கூடாது - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
X

சென்னை: உணவகங்களில் இருந்து எடுத்துச் செல்லப்படும் பார்சல் உணவு மற்றும் பானங்கள் ஆகியவற்றிற்கு சேவை வரி வசூலிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக உணவகங்களில் இருந்து எடுத்துச் செல்லப்படும் பார்சல் உணவுக்கும் சேவை வரி பொருந்துமா என்பது தொடர்பாக, சென்னை அஞ்சப்பர் செட்டிநாடு, தலப்பாகட்டி, ஆர்எஸ்எம், பிரசன்னம் மற்றும் சங்கீதா உணவு நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.

பின்னர் மனுக்களை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், அனைத்து உணவகங்களிலும் உணவு மற்றும் பானங்கள் விற்பனைக்கு சேவை வரி முதலில் விதிக்கப்பட்டது. பின் குளிர்சாதன வசதி உள்ள ஓட்டல்களுக்கு மட்டும் என வரையறுக்கப்பட்டது. உணவுக்கான மூலப்பொருட்களை தயாரிப்பது அவற்றை வாங்குவது உணவை தயாரிப்பது இவற்றுக்கு எல்லாம் வரி விதிப்பு பொருந்தாது.

எனவே ஓட்டல்களில் இருந்து பார்சல்களில் உணவு மற்றும் பானங்கள் எடுத்து செல்வதற்கு சேவை வரி பொருந்தாது. சேவை வரித்துறை உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Updated On: 6 Jun 2021 4:22 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  5. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  6. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
  8. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு
  9. பொன்னேரி
    பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
  10. வீடியோ
    🔴LIVE : 16 ஆண்டுகளுக்கு பின் come back Action Hero-வாக நடித்து...