காசிமேட்டுக்கு மீன் வரத்து அதிகரிப்பு, விலை வீழ்ச்சி, மக்கள் மகிழ்ச்சி

காசிமேட்டுக்கு மீன் வரத்து அதிகரிப்பு, விலை வீழ்ச்சி, மக்கள் மகிழ்ச்சி
X

பைல் படம்

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் விலை வீழ்ச்சியடைந்ததால், மக்கள் திரண்டு வந்து மீன்களை வாங்கிச் சென்றனர்.

மீனவர்கள் வசை படகுகள் பைபர் படகுகள் மூலம் கடலுக்குள் மீன் பிடிக்க செல்கின்றனர். டீசல் விலை ஏற்றம் காரணமாக கடலில் சென்று மீன் பிடிக்க செல்லும் விசைப்படகுகள் குறைந்த அளவே மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.

நேற்றும் இன்றும் மீன் வாங்க சென்னையில் பல இடங்களில் இருந்து ஏராளமான மக்கள் காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு வந்திருந்தனர்.

போலீசார், மாநகராட்சி பணியாளர்கள் சமூகக் கட்டுப்பாடுகளை அரசு விதிகளையும் மதித்து நடக்க வேண்டும் என பொதுமக்களுக்கும், மீன் வியாபாரிகளுக்கும் அறிவுறுத்தி கொண்டே இருந்தனர்.

காசிமேடு துறைமுகத்தில் மீன்களின் வரத்து அதிகரித்ததால் விலை குறைந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சியோடு மீன்களை வாங்கிச் சென்றனர்.

Tags

Next Story