Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
திருமணங்களுக்கு செல்ல விரைவில் மீண்டும் 'இ - பதிவு' முறை அனுமதி
தமிழகத்தில் திருமணங்களுக்கு செல்ல வசதியாக மீண்டும் 'இ - பதிவு' முறையை தமிழக அரசு தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
HIGHLIGHTS
கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது, மருத்துவ அவசரம், இறப்பு மற்றும் இறப்பு சார்ந்த காரணங்களுக்கு மட்டும், இ - பதிவு அனுமதி வழங்கப்பட்டது.
தற்போது, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை வழங்கிய பிறகும், திருமண நிகழ்வில் பங்கேற்பதற்கான, இ - பதிவு வசதி வழங்க அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. விரைவில் பொதுப்போக்குவரத்து அரசு அனுமதி வழங்க உள்ள நிலையில் ஜூன், ஜூலையில் ஏராளமான முகூர்த்த தினங்கள் இருப்பதால் திருமண வீட்டை சேர்ந்தவர்கள் திருமணத்திற்கு செல்ல வசதியாக தற்காலிமாக நிறுத்தப்பட்ட திருமணங்களுக்கான, 'இ - பதிவு' வசதி விரைவில் தொடங்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.