/* */

சென்னை: ரயில் நிலையங்களில் துாய்மை விழிப்புணர்வு பிரசாரம்

தெற்கு ரயில்வே சார்பில், ரயில் நிலையங்களில் 15 நாட்கள் துாய்மை விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்படுகிறது.

HIGHLIGHTS

சென்னை: ரயில் நிலையங்களில் துாய்மை விழிப்புணர்வு பிரசாரம்
X

கோப்பு படம்

தெற்கு ரயில்வே சார்பில், ரயில் நிலையங்களில் 15 நாட்கள் துாய்மை விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்படுகிறது. இதன்படி, தெற்கு ரயில்வேயின் பிரதான ரயில் நிலையங்களில், துாய்மை பாதுகாப்பு குறித்து, பயணியருக்கு விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியை, சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் நிலையத்தில், தெற்கு ரயில்வே தலைமையக பொது மேலாளர் ஜான் தாமஸ் மற்றும் சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர். சென்னை ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர்கள் ஆனந்த், சச்சின் புனிதா, சுப்பிரமணியம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

பிரசாரத்தில், நிலையங்களையும் ரயில்களையும் துாய்மையாக வைத்துக் கொள்ள பயணியரின் ஒத்துழைப்பு அவசியமானது. ஒருமுறை உபயோகிக்கும் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தரமற்ற பிளாஸ்டிக்கால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், கண்காட்சியும் நடத்தப்பட்டது. வரும், 30ம் தேதி வரை என, 15 நாட்கள் நடத்தப்படும் துாய்மை பிரசாரத்தில், ரயில்வே சாரணர் இயக்கத்தினர், அரசு சாரா நிறுவனங்கள், தன்னார்வலர்கள் பங்கேற்கின்றனர்.

Updated On: 17 Sep 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  2. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  3. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  4. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  5. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  10. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து