மெட்ரோ ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி
X

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் முழு ஊரடங்கு அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால் சென்னையில் இருந்து சொந்த ஊரை நோக்கி செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

இந்த நிலையில் சென்னையில் இருந்து மற்ற பகுதிகளுக்கு பேருந்து நிலையத்திற்கும் விமான நிலையத்திற்கும் ரயில் நிலையத்துக்கும் செல்வதற்கு வசதியாக நாளை சிறப்பு மெட்ரோ ரயில்களை இயக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது

எனவே நாளை மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் செயல்படும் என்றும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பத்து நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture