/* */

சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தல்,நோயாளி போல் நடித்த பயணி கைது

சென்னை விமானநிலையத்தில் நோயாளி போல நடித்து தங்கம் கடத்தியவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 20 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தல்,நோயாளி போல் நடித்த பயணி கைது
X

சென்னை  விமானத்தில் கடத்தி வந்த தங்கம் பறிமுதல்

சிறப்பு விமானத்தில் நோயாளியாக நடித்து சக்கர நாற்காலியில் வந்தவரின் பேண்ட் உள்பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த ரூ.20 லட்சம் மதிப்புடைய 465 கிராம் தங்கக்கட்டிகளை மறைத்து எடுத்துவந்த பயணி சென்னை விமானநிலையத்தில் கைது.

துபாயிலிருந்து சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு எமரேட்ஸ் ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் இன்று காலை வந்தது.

அதில் வந்த பயணிகளை சென்னை விமானநிலைய குடியுறிமை அதிகாரிகள் சோதனையிட்டனா்.அப்போது சென்னையை சோ்ந்த முகமது அபுபக்கா்(62) என்பவா் நோயாளி என்று பரிந்துரைத்து சக்கர நாற்காலியில் வைத்து விமானநிலைய ஊழியா் வெளியே தள்ளிவந்தனர்.

சுங்கச்சோதனை பிரிவில் வழக்கமாக சக்கரநாற்காலி பயணியை நிறுத்தி சோதனையிடாமல் அனுப்பி விடுவாா்கள்.எனவே விமானநிலைய ஊழியா் கிரீன் சேனல் வழியாக சக்கரநாற்காலியை தள்ளிக்கொண்டு சென்றாா்.

ஆனால் சுங்கத்துறையினருக்கு அந்த நோயாளி பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது.இதையடுத்து அவரை மீண்டும் உள்ளே வரவழைத்து சோதனையிட்டனா்.

இதையடுத்து சக்கரநாற்காலியில் நோயாளியாக வந்த முகமது அபுபக்கா் சுங்கத்துறையினரிடம் கடும் வாக்குவாதம் செய்தாா்.

ஆனாலும் அதிகாரிகள் அவரை தொடா்ந்து சோதனையிட்டனா்.அவா் அணிந்திருந்த பேண்ட் உள்பாக்கெட்களில் 4 தங்கக்கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனா்.

அதன் மொத்த எடை 465 கிராம்.சா்வதேச மதிப்பு ரூ.20 லட்சம்.இதையடுத்து நோயாளியாக நடித்துவந்த பயணியை சுங்கத்துறையினா் கைது செய்து, ,தங்கக்கட்டிகளையும் பறிமுதல் செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா்.

Updated On: 22 Jun 2021 5:55 PM GMT

Related News

Latest News

  1. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  2. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  4. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  5. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  7. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி மே.20ல் துவக்கம்
  8. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  9. காஞ்சிபுரம்
    ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்மமான முறையில் எரிந்த இரண்டு ஜேசிபி...
  10. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...