/* */

விமானத்தின் கழிவறையில் ரூ.65.38 லட்சம் தங்கம் பறிமுதல்

விமானத்தின் கழிவறையில் ரூ.65.38 லட்சம் தங்கம் பறிமுதல்
X

சென்னை வந்த விமானத்தில் ரூ.65.38 லட்சம் மதிப்பிலான தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

துபைலிருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படக்கூடும் என்று உளவுத்துறையிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், துபைலிருந்து சென்னை வந்த ஏர் இந்தியா ஏஐ-906 என்ற விமானத்தை, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது விமானத்தின் கடைசி இரண்டு கழிவறைகளில் வெள்ளை நிற டேப்பால் சுற்றப்பட்ட பொட்டலம் ஒன்று இருப்பது தெரியவந்தது.

அதைப் பிரித்துப் பார்த்த போது, 583 கிராம் எடையில் வெளிநாட்டு முத்திரைகளுடன் 10 தங்க வெட்டுத் துண்டுகளும், 870 கிராம் எடையில் தங்கப்பசை அடங்கிய 6 பொட்டலங்களும் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தமாக ரூ. 65.38 லட்சம் மதிப்பில் 1.36 கிலோ தங்கம், கேட்பாரற்று இருந்ததாக சுங்கச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 11 April 2021 1:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  3. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  6. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  7. திருத்தணி
    திருத்தணி ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது
  8. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  9. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  10. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...