/* */

காந்தியடிகள் 153-வது பிறந்த நாளில் ஆளுநர், முதல்வர் மரியாதை செலுத்தினர்

தேசத் தந்தை காட்டிய நல்வழியில் நாமும் நாடும் நடைபோடுவதே இன்றைக்கும் என்றைக்கும் தேவையாகும் - முதல்வர் ஸ்டாலின்

HIGHLIGHTS

காந்தியடிகள் 153-வது பிறந்த நாளில் ஆளுநர், முதல்வர் மரியாதை செலுத்தினர்
X

காந்தியடிகள் 153-வது பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று சென்னை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தியடிகளின் சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்வின்போது, அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியில் கூறியதாவது :

அகிம்சை சகோதரத்துவம் மானுட சமுதாயத்திற்கு என இன்றியமையாத பண்புகளை வாழ்வின் நெறியாகக் கொண்டு வாழ்ந்து நமக்குக் கற்பித்த மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாள்!

தேசத் தந்தை காட்டிய நல்வழியில் நாமும் நாடும் நடைபோடுவதே இன்றைக்கும் என்றைக்கும் தேவையாகும்! என்று தெரிவித்துள்ளார்.

Updated On: 2 Oct 2021 10:23 AM GMT

Related News