/* */

பொதுமக்கள் குறை கேட்பு சிறப்பு மையம், அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் பொது மக்கள் குறைகேட்பு சிறப்பு மையத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

பொதுமக்கள் குறை கேட்பு சிறப்பு மையம், அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்
X

சென்னை  இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் பொது மக்கள் குறைகேட்பு சிறப்பு மையத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

இந்த சேவையை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் 04428339999 என்ற எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என்றும் குறைதீர்ப்பு மையத்தில் பெறப்படும் கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உடனே அனுப்பி வைக்கப்படும்.

பெறப்பட்டதற்கான ஒப்புதல் அவர்களுக்கு உடனே அனுப்பபடும். மேலும் கோரிக்கை சம்பந்தபட்ட விவரங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு 15 நாட்களுக்குள் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையத் துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர் (நிர்வாகம்) கண்ணன் கூடுதல் ஆணையர் (விசாரணை) திருமகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Jun 2021 7:12 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  2. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  3. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  4. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  6. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...
  7. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  8. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  9. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  10. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?