/* */

ஓ.பன்னீர்செல்வத்தின் குட்டிக்கதை சசிகலாவிற்கு பொருந்தாது:முன்னாள் அமைச்சர்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் குட்டிக்கதை சசிகலாவிற்கு பொருந்தாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

HIGHLIGHTS

ஓ.பன்னீர்செல்வத்தின் குட்டிக்கதை சசிகலாவிற்கு பொருந்தாது:முன்னாள் அமைச்சர்
X

சென்னை சேத்துப்பட்டில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார்.

சேத்துப்பட்டில் நடத்த கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது.

சிறுபான்மையினரை உணர்வுப் பூர்வமாக நேசிக்கும் இயக்கம் அதிமுக. பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து இந்தியாவில் சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டனர் , அப்போது ஜெ. அரசு தமிழகத்தில் முழுமையான பாதுகாப்பு வழங்கி சிறுபான்மையினரை காத்தது.

கோவை குண்டுவெடிப்பின் தொடர்ச்சியாக 1998 திமுக ஆட்சியில் குற்றமிழைத்தவர்களை தண்டிக்காமல் அப்பாவி இசுலாமியர்கள் மீது அடக்குமுறைகளை ஏவி , மசூதிக்குள் அத்துமீறி நுழைந்தனர் . குறிப்பாக டிசம்பர 6 ல் இசுலாமியர்களுக்கு அதிக பயம் இருந்தது. கட்சி சார்பில் ரமலான் நோன்பு திறந்து , கிறிஸ்துமஸ் பெருவிழா நடத்தும் ஒரே கட்சி அதிமுக.

மனத குலம் தோன்றியது முதல் தவறிழைத்தல் இயல்பு. ஆனால் திருந்தி வாழுவது மனித குலத்தின் சிறப்பு. சசிகலாவிற்கு மன்னிப்பே கிடையாது என்பதில் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளர்களும் உறுதியாகவே இருக்கிறார்கள்.

சசிகலா இணைப்பு அர்த்தத்தில் ஓபிஎஸ் குட்டிக் கதை கூறவில்லை. சசிகலாவை சேர்க்க கூடாது என கட்சியினர் அனைவரும் ஒரே எண்ணத்தில் இருக்கிறோம்.

ஓபிஎஸ் கூறிய கதைக்கு கண் காது மூக்கு வைத்து உருவம் கொடுக்காதீர். அந்த கதை பாமரர்களுக்கே பொருந்தும் , சசிகலாவுக்கு பொருந்தாது.

சசிகலா இணைப்பு குறித்த அதிமுக உட்கட்சி விவகாரத்தில் அண்ணாமலை கருத்து கூறக் கூடாது , கருத்து கூறினால் அது தவறு என்று கூறினார்.

மீனவர் கைது உட்பட எந்த ஜீவாதார பிரச்சனை குறித்தும் நாடாளுமன்றத்தில் திமுகவினர் பேசவில்லை. டெல்லியில் போண்டா , பஜ்ஜி சுண்டல் சாப்பிட்டு உல்லாசமாக இருக்க தமிழக மக்கள் அவர்களை அனுப்பவில்லை, திமுகவினர் புரிந்து கொள்ள வேண்டும். மேற்கொண்டு மீனவர் கைது நடவடிக்கை இல்லாதவாறு மத்திய , மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உதயநிதி , இன்பநிதி , சபரீசன் , கனிமொழி காம்ப்ளக்ஸ்களை திமுக புதிதாக உருவாக்கி கொள்ளட்டும் , ஆனால் ஜெயலலிதா பெயரில் உள்ள கட்டட பெயரை மாற்ற வேண்டாம்.

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையாக வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது.

ஆவடி நாசர் ஒரு பன்மொழிப் புலவர் , உத்தம புத்திரன். அவரது மகன் ஆவடி பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார் என்று தெரிவித்தார்.

Updated On: 20 Dec 2021 5:56 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  2. ஈரோடு
    பெருந்துறையில் எடப்பாடி பழனிசாமியின் 70 வது பிறந்தநாளையொட்டி
  3. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  4. தேனி
    வீரபாண்டி கோவில் திருவிழாவில் ஒரே நேரத்தில் 61 அக்னிசட்டி எடுத்த...
  5. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  6. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  7. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  8. கல்வி
    ஆசிரியர் பணி கலந்தாய்வு தொடர்பாக பள்ளி கல்வி துறை இயக்குனரகம்...
  9. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  10. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...