/* */

சென்னை பசுமை வழிச்சாலை பகுதியில் ட்ரோன்கள் மூலம் கொசு ஒழிப்பு பணி

சென்னை பசுமை வழிச்சாலை பகுதியில் ட்ரோன்கள் மூலம் கொசு ஒழிப்பு பணியை அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

சென்னை பசுமை வழிச்சாலை பகுதியில் ட்ரோன்கள் மூலம் கொசு ஒழிப்பு பணி
X
சென்னையில் ட்ரோன் மூலம் கொசு ஒழிப்பு பணியை அமைச்சர் நேரு  துவக்கி வைத்தார்.

சென்னை பசுமை வழிச்சாலை பகுதியில் உள்ள நீர்வழித்தடங்களில் ட்ரோன்கள் மூலம் கொசு ஒழிப்பு பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், சென்னையில் கொசுக்கள் அழிக்கும் வகையில், டிரோன்கள் மூலம் மருந்துகள் தெளிக்கும் பணி இன்று தொடங்கப்பட்டு உள்ளது என்றும், அதிக கொசுக்கள் உள்ள நிலையில் இதனை கட்டுப்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார்.

குறிப்பாக சென்னையில் 3463 பணியாளர்கள் சென்னையில் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், கைத்தெளிப்பான்கள், 371 பேட்டரி மூலம் இயங்கக் கூடிய கைத்தெளிப்பான்கள் மற்றும் 129 விசைத்தெளிப்பான்கள் மூலம் கொசுக்கொல்லி மருந்து தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.

மேலும் சென்னையின் அனைத்து பகுதியிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் கொசு மருந்து தெளிக்கும் பணிகளில் ஈடுபட உள்ளதாக கூறிய அவர், சென்னையில் ஏற்பட்ட பெருமழைக்கு பிறகு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலைகள் புதிதாக போடப்பட்டு உள்ளதாகவும், தற்போது தேர்தல் பணியால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சாலை போடும் பணி மீண்டும் தொடங்கப்படும் என்றார்.

அதேபோல் சென்னை மாநகராட்சியோடு புதிதாக இணைக்கப்பட்டுள்ள புறநகர் பகுதிகளுக்கும் சென்னையில் இருப்பதுபோல் நீர், பாதாள சாக்கடை, போன்ற அடிப்படை வசதிகளும் உடனடியாக செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளும் தேவையான பணிகள் துரிதப்படுத்தப்படும் என்றார். அதுமட்டுமின்றி சென்னை மாநகராட்சி நிதி சுமை காரணமாக காலி பணியிடங்கள் நிறப்பப்படவில்லை. முதல்வரின் அனுமதி பெற்று நிரப்பப்படும் என்றும், ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்து விசாரிக்க விரைவில் குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.


Updated On: 28 Feb 2022 12:52 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  3. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  5. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  6. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி பாலக்கரையில் உள்ள சிவாஜி சிலை சங்கிலியாண்டபுரத்திற்கு
  8. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
  9. க்ரைம்
    கரூர் அருகே விவசாய கிணற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் அன்பில் தர்மலிங்கத்தின் 105 வது பிறந்த நாள் விழா