/* */

சென்னை சென்ட்ரலில் மூலிகை கலந்த ஆவி பிடிக்கும் இயந்திரங்கள்!

கொரோனாவை தடுக்கும் வகையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆவி பிடிக்கும் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சென்னை சென்ட்ரலில் மூலிகை கலந்த ஆவி பிடிக்கும் இயந்திரங்கள்!
X

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் சார்பில் ரயில் பயணிகளுக்கு கொரோனா தொற்று பரவாமல் இருக்க மூலிகையுடன் கலந்த ஆவி பிடிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் கூடவே கபசுர குடிநீரும் வழங்கப்பட்டு வருகின்றது. இதேபோல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பெட்ரோல் பங்குகளில் மூலிகை ஆவி பிடிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.'

சங்ககிரி ரோட்டில் உள்ள திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த பெட்ரோல் பங்கில், சுவாசத்தை சுத்தமாக்கவும், கொரோனா பரவலை தடுக்கும் விதமாகவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு பெரிய குக்கரில் ஆடாதோடை இலை, கற்பூரவள்ளி, துளசி, வேம்பு, கிராம்பு, மிளகு, மஞ்சள், எலுமிச்சை, உப்பு, இஞ்சி, வெற்றிலை உள்ளிட்ட 12 மூலிகை பொருட்களை போட்டு கொதிக்க வைத்து, இதில் உருவாகும் ஆவியை குழாய்களில் கொண்டு வந்து, 4 இடங்களில் ஆவி பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா காலம் முடியும் வரை இம்முறை தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Updated On: 17 May 2021 5:01 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    திருமணத்தில் ஆண்கள் - பெண்கள் எவ்வளவு வயது வித்யாசம் இருக்கலாம்?
  2. லைஃப்ஸ்டைல்
    உடலுக்கு இரும்பு போன்ற வலிமை வேண்டுமா? கம்பு லட்டு சாப்பிடுங்க!
  3. லைஃப்ஸ்டைல்
    வீடுகளில் சிலைகளை வைத்திருக்கிறீர்களா? - இந்த விஷயங்களை...
  4. லைஃப்ஸ்டைல்
    முட்டைகளை பிரிட்ஜில் வைக்கலாமா? கூடாதா?
  5. இந்தியா
    மைசூருவில் பெண்ணின் உடலை 200 மீட்டர் காட்டுக்குள் இழுத்துச் சென்ற...
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் குளியலறை எந்த திசையில் இருக்க வேண்டும் என்று தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    சுவை மிகுந்த மீல் மேக்கர் கிரேவி செய்வது எப்படி?
  8. உலகம்
    வரும் 28ல் உலக பட்டினி தினம் - பசி இல்லாத ஒரு உலகை படைத்திடுவோம்!
  9. விளையாட்டு
    கரூர் அகில இந்திய கூடைப்பந்து போட்டி: நாளை இறுதி போட்டி
  10. வணிகம்
    நாளை உலக மார்க்கெட்டிங் தினம்..! வியாபாரத்துக்கு அது முக்கியமுங்க..!