சென்னையில் யானை தந்தம் கடத்திய கார் விபத்து: வனத்துறை விசாரணை

சென்னையில் யானை தந்தம் கடத்திய கார் விபத்து: வனத்துறை விசாரணை
X

பைல் படம்.

சென்னையில் விபத்தில் சிக்கிய காரில் யானை தந்தம் இருந்ததால் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை, எழும்பூர் காசா மேஜர் சாலையில் இரவு சொகுசு கார் மோதியதில் நானோ கார் ஒன்று விபத்தில் சிக்கி நின்றது. போலீசார் வருவதற்குள் நானோ காரில் வந்தவர்கள் தப்பி முயன்றனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சந்தேகமடைந்து காரை பரிசோதனை செய்த போது காரில் யானை தந்தம் மற்றும் மான் கொம்பு ஆகியவை இருந்தது.

இதனையடுத்து அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட தந்தம் மற்றும் மான் கொம்பு ஆகியவற்றை, வண்டலுாரில் உள்ள பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இந்த பரிசோதனையில் யானை தந்தம், மான் கொம்பு என்பது உறுதியானால், விபத்தில் சிக்கிய காரில் இருந்த வில்சன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை நிறைவுக்கு பிறகு வில்சன் மீது வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

Tags

Next Story
why is ai important to the future