/* */

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தாத்தாவுக்கு 5 ஆண்டுகள் சிறை

பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாத்தாவிற்கு, ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தாத்தாவுக்கு 5 ஆண்டுகள் சிறை
X

பைல் படம்.

சென்னை ராயபுரம், ஆட்டுதொட்டி, ஆஞ்சநேயர் நகரைச் சேர்ந்தவர் கணேசன் 48. இவர், தன் பேத்தி முறை கொண்ட, 9 வயது சிறுமிக்கு கடந்த 2020 ஜூன், 4ம் தேதி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியின் தாய் கொடுத்த புகாரில், ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், கணேசன் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

போலீசார் அவரை 'போக்சோ' சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை மகிளா நீதிமன்றத்தில், இந்த வழக்கு நடந்து வந்தது. விசாரணை முடிந்து, நீதிபதி ராஜலட்சுமி, கணேசனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, ரூ.2 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு, அரசு வழங்கவும் உத்தரவிட்டார். போலீசார் கணேசனை கைது செய்து புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

Updated On: 25 Sep 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...