/* */

ரெம்டெசிவிர் மருந்து கள்ள சந்தையில் விற்பனை: மருத்துவர் கைது

ரெம்டெசிவிர் மருந்தை கள்ள சந்தையில் விற்ற மருத்துவர் கைது - தாம்பரத்தில் பரபரப்பு

HIGHLIGHTS

ரெம்டெசிவிர் மருந்து  கள்ள சந்தையில் விற்பனை: மருத்துவர் கைது
X

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் ரெம்டெசிவிர் மருந்துக்கான தட்டுப்பாடு அதிகமாக எழுந்துள்ளது.

இந்நிலையில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ள சந்தையில் வாங்கி அதிக விலைக்கு விற்கும் கும்பலும் திரிந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தாம்பரம் தனியார் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் முகமது இம்ரான்கான் என்பவர் ரெம்டெசிவிர் மருந்தை கள்ள சந்தையில் வாங்கி வெளியே 20 ஆயிரம் வரை விலை வைத்து விற்றதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில் மேற்கு தாம்பரத்தில் உள்ள மருத்துவமனைக்கு அருகே நடந்த வாகன சோதனையின்போது, முகமது இம்ரான்கான் பிடிபட்டதுடன் உண்மையும் ஒத்துக்கொண்டுள்ளார். அதை தொடர்ந்து அவரை போலீஸார் கைது செய்துள்ளதுடன் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் நலனுக்காக ரெம்டெசிவிர் மருந்தை தமிழக அரசு நேரடியாக கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்து வரும் நேரத்தில் கள்ளச்சந்தையில் இவ்வாறு அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களை அரசு கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Updated On: 30 April 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?