/* */

மே 2ம் தேதிக்கு முன்பு தபால் வாக்குகளை எண்ணக் கூடாது - அமைச்சர் ஜெயகுமார் மனு

மே 2ம் தேதிக்கு முன்பு தபால் வாக்குகளை எண்ணக் கூடாது - அமைச்சர் ஜெயகுமார் மனு
X

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மே 2ம் தேதி எண்ணப்படுகிறது. இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை அமைச்சர் ஜெயகுமார் நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளார்.

அப்போது, அவர் கூறியிருப்பதாவது :- மக்கள் பிரதிந்தித்துவ சட்டத்தின்படி, வாக்கு எண்ணும் நாளில் மட்டுமே தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டும். அதற்கு முன்னதாக எண்ணப்படக் கூடாது. கடந்த கால வழிமுறைகள் தான் கடைப்பிடிக்க வேண்டும்.

மே1 ஆம் தேதியே தபால் வாக்குகள் கட்டுக்கள் பிரிக்கப்பட்டு வரிசைப்படுத்தி வைக்க உள்ளதாக சில மாவட்டங்களில் இருந்து அதிமுக வேட்பாளர்கள் புகார் அளித்துள்ளார்கள். இது தொடர்பாக புகார் அளித்துள்ளோம். யாரும் எவ்வித குறையும் சொல்லாத அளவுக்கு தேர்தல் ஆணையம் செயல்படும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. வாக்கு எண்ணும் மேசைகள் எந்த காரணம் கொண்டும் குறைக்கக்கூடாது என அமைச்சர் ஜெயகுமார் மனுவில் தெரிவித்து உள்ளார்.

Updated On: 22 April 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்