/* */

4 விமானங்களில் 50 ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள் : சென்னை வந்தடைந்தன

4 நாடுகளில் இருந்து 4 சரக்கு விமானங்களில் 50 ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள் சென்னை வந்தடைந்தன.

HIGHLIGHTS

4 விமானங்களில் 50 ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள் : சென்னை  வந்தடைந்தன
X

சென்னை விமான நிலையத்தில் வந்து இறக்கப்படும் ஆக்சிஜன் கருவிகள்.

அமெரிக்கா,இங்கிலாந்து,ஹாங்காங்,சீனாவிலிருந்து 4 சரக்கு விமானங்களில் 50 ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள் சென்னை விமானநிலையம் வந்தடைந்தன.

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை இந்தியா முழுவதும் பெருமளவு பரவி வருகிறது.ஏற்கனவே நாட்டின் வட மாநிலங்களில் பெருமளவு தாக்குதல் நடத்திய கொரோனா வைரஸ்,தற்போது தென்மாநிலங்களிலும் வீரியம் எடுத்துள்ளது.அந்த நிலையில் தமிழகத்திலும் பாதிப்பு அதிகரித்துள்ளது.குறிப்பாக சென்னை,கோவை,செங்கல்பட்டு,திருவள்ளூா்,திருப்பூா்,திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பதிலும்,வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து ஆக்சிஜனை தமிழகம் கொண்டு வருவதற்கும் தமிழக முதலமைச்சா் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறாா். இதற்கிடையே தனியாா் நிறுவனங்கள்,மருத்துவமனைகள்,தொண்டு நிறுவனங்கள் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவிகளை பெருமளவு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கின்றன. அரசும் அதற்கு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு அமெரிக்கா,இங்கிலாந்து, சீனா,ஹாங்காங்கிலிருந்து 4 சரக்கு விமானங்கள் சென்னை பழைய விமானநிலைய சரக்கக பிரிவுக்கு வந்தன. அந்த விமானங்களில் 50 ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவிகள் வந்திறங்கின. நள்ளிரவாக இருந்தாலும்,மற்ற பணிகளை எல்லாம் நிறுத்தி வைத்துவிட்டு, இந்த 50 ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகளையும் உடனடியாக டெலிவரி கொடுத்து அனுப்பினா். மருத்துவ உபகரணங்கள் டெலிவரி செய்வதில் காலதாமதம் ஏற்படாமல் செயல்படுவதை கண்காணிக்க சுங்கத்துறை மற்றும் விமானநிலைய அதிகாரிகள் இணைந்து ஒரு குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Updated On: 21 May 2021 8:53 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  2. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  3. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  4. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  8. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  10. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு