தமிழக போலீசில் கூடுதல் எஸ்.பி.க்கள் இடமாற்றம்: டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு
தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு ( பைல் படம்)
By - C.Pandi, Reporter |15 July 2021 8:42 AM GMT
தமிழக போலீசில் கூடுதல் எஸ்.பி.க்கள் நான்கு பேரை இடமாற்றம் செய்து, டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, சென்னை காத்திருப்போர் பட்டியலில் இருந்த சேகர், நாமக்கல் மாவட்ட எஸ்.பி அலுவலக தலைமை இடத்துக்கும், விஜயகுமார், அரியலூர் எஸ்.பி, அலுவலக தலைமை இடத்துக்கும், ஜெயசந்திரன், கடலூர் மாவட்ட பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவுக்கும் பணியிடம் ஒதுக்கப்பட்டது.
இதுதவிர திருப்பூர், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு வேல்முருகன், கன்னியாகுமரி மாவட்டத்தின் அதே பிரிவுக்கு இடமாற்றப்பட்டார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu