/* */

சென்னை மெரினாவில் கடந்த 50 நாளில் 13 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு

மெரினா கடற்கரையில் தடையை மீறி கடலில் இறங்கி அலையில் சிக்கி உயிர்பலி ஏற்படுவதை தடுக்க ஒருங்கிணைந்த உதவி மையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

HIGHLIGHTS

சென்னை மெரினாவில் கடந்த 50 நாளில் 13 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
X

பைல் படம்.

கடந்த 50 நாட்களில் மெரினா கடற்கரைக்கு வந்த 13 பேர் கடலில் மூழ்கி இருந்துள்ளார்கள். தடையை மீறி கடலில் இறங்கி அலையில் சிக்கி உயிர்பலி ஏற்படுவதை தடுக்க ஒருங்கிணைந்த உதவி மையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி தடை நீக்கப்பட்டு பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மணல் பரப்பில் உற்சாகமாக பொழுதை கழிக்கும் மக்கள், ஆர்வம் மிகுதியால் கடலுக்குள் இறங்கி குளிக்க முற்படுகின்றனர். அப்போது அலையில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. கடந்த 50 நாட்களில் மட்டும் 13 பேர் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நேரத்தில் அனைவருக்கும் தகவல் கொடுக்கும் வகையில் ஒருங்கிணைந்த வாட்ஸ் அப் குழு ஒன்றும் தொடரப்பட்டுள்ளது. அலையில் சிக்கி கொள்பவர்கள் தொடர்பான தகவலை 949810024 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். அதனை பதிவு செய்யும் அவசர உதவி மைய காவலர்கள் அதுகுறித்த தகவலை அனைத்து துறையினருக்கும் ஒரேநேரத்தில் பகிர்வார்கள். அதனால் மீட்புப்பணி துரிதமடைவதுடன் அலையில் சிக்கி தவிப்பவர்களை உடனடியாக காப்பாற்ற முடியும் என்று திருவல்லிக்கேணி உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

மெரினா கடற்கரையில் குளிப்பவர்களை தடுப்பதற்கு தற்போது போலீசாரின் நேரடி ரோந்து பணி நடைமுறையில் உள்ளது. மேலும் மணற்பரப்பில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களும் உள்ளது. இதுதவிர நவீன வசதிகளுடன் 3 கண்காணிப்பு கோபுரங்கள் நிறுவவும் போலீசார் முடிவு செய்திருக்கின்றனர். மெரினாவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டு வந்தாலும் அங்கு செல்கின்ற பொதுமக்கள் தொலைவில் இருந்து கடலை ரசிப்பது ஒன்றே உயிரிழப்புகளை தடுக்க உதவும். ஆகையால் பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளபடுகிறது.

Updated On: 12 Oct 2021 11:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  3. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  4. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  5. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  6. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  7. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  8. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  9. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!