/* */

கொரோனாதடுப்புடன் பருவகால மழை கண்காணிப்புபணி: அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்

கொரோனா அச்சத்தை கருத்தில்கொண்டு பருவமழை கால நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

கொரோனாதடுப்புடன் பருவகால மழை கண்காணிப்புபணி: அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
X

சென்னை எழிலகத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தயாளர்களை சந்தித்தபோது.

அந்தமான் மற்றும் வங்கக்கடல் பகுதியில் புயல் உருவாக உள்ள நிலையில் அது குறித்து தமிழக அரசு செய்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விளக்க சென்னை எழிலகம் வளாகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் வழக்கமாக அடுத்த மாதம் தொடங்கும் பருவ மழை, இந்த வருடம் முன்கூட்டியே ஆரம்பிப்பதாக தெரிவித்தார்.மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கிருஷ்ணகிரி, நீலகிரி, என பல்வேறு மாவட்டங்களில் மலை பொழியும் வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வரும் 22ம் தேதி அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழத்த தாழ்வு பகுதி உருவாகி அது 24ம் தேதி புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாக தெரிவித்த அவர், இதன் தாக்கத்தால் கடலோர மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, தேனி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவித்தார்.

மழை நேரங்களில் ஏரி குளங்கள் உடையாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்

மழை வெள்ளதால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க முகாம்கள் அமைக்கப்படும் எனவும் அதேப்போல், கொரோனா தொற்றை கருத்தில்கொண்டு முகாம்களில் தனிநபர் இடைவெளி கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக முகாம்களின் எண்ணிக்கை அதிகப்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களை திரும்பி வரச் சொல்லி செயற்கைக்கோள் தொலைபேசி மூலம் அறிவுறுத்தி இருப்பதாகும், கடலுக்கு சென்ற 45நாட்டு படகுகளில் 27திரும்பியுள்ளதாகவும் 18படகுகள் திரும்பிவிடும் எனவும் அதையும் கண்காணிக்கிறோம் எனவும் கூறினார்.

நீலகிரிக்கு பேரிடர் மீட்பு படையை அனுப்பியுள்ளதாக தெரிவித்த அவர், புயலை எதிர்கொள்ள மாநில மற்றும் மத்திய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளதாகவும், முன்னெச்சரிக்கையாக இருக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் அறிவுறுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.

Updated On: 22 May 2021 6:27 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  2. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  5. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  6. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  7. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  8. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  9. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  10. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?