/* */

மே 18: விசிக சார்பில் சென்னையில் நினைவேந்தல்: திருமாவளவன் பங்கேற்பு!

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மே-18 *சர்வதேச இனப்படுகொலை நாள் நினைவேந்தல்* நிகழ்வு சென்னை அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான அம்பேத்கர் திடலில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. அங்கு அமைக்கப்பட்ட ஈழ நினைவு படத்திற்கு மலர் தூவி,மெழுகுவர்த்தி ஏற்றி ஈழப்போரில் மரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி.

HIGHLIGHTS

மே 18: விசிக சார்பில் சென்னையில் நினைவேந்தல்: திருமாவளவன் பங்கேற்பு!
X

திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மே-18 சர்வதேச இனப்படுகொலை நாள் நினைவேந்தல் சென்னை அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான அம்பேத்கர் திடலில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது.

அங்கு அமைக்கப்பட்ட ஈழ நினைவு படத்திற்கு மலர் தூவி,மெழுகுவர்த்தி ஏற்றி ஈழப்போரில் மரணமடைந்த வீரர்களுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார். இந்த நினைவேந்தல் நிகழ்வில், கட்சியின் முதன்மை செயலாளர் உஞ்சை அரசன், தலைமை நிலையச் செயலாளர்கள் இளஞ்சேகுவேரா, பாலசிங்கம் உள்ளிட்ட முன்னணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், தமிழ் சமுகம் அவர்களுக்குள் இருக்கும் விமர்சனங்களை கைவிட வேண்டும். ஈழத்தமிழர்களின் நலன்களை முன்னிறுத்தி அனைவரும் கைகோர்க்க வேண்டும். இந்த உணர்வு ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும், அனைத்து தமிழ்நாட்டு கட்சிகளும் ஒருங்கிணைக்க முயற்சி எடுக்க வேண்டும்.

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அரசு நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் மாநில அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்காமல் அதிகாரிகளை மட்டும் ஆலோசனை நடத்துவது மத்திய பாஜக அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி கிளை ஆட்சி நடத்துவது போல் உள்ளது

ஒரே கட்சி மத்தியிலும் மாநிலத்திலும் செயல்பட வேண்டும் என்று பாஜக முயற்சி செய்கிறது. இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இதனால் தமிழக அரசு இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தது வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது என்றார்.

Updated On: 18 May 2021 3:16 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  2. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  3. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  4. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  5. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  6. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  7. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  8. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  10. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...