/* */

தற்போது பெய்த மழையினால் பயிர் சேதங்கள் கணக்கெடுப்பு: அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் 124 முகாம்களில் 11329 நபர்களை தங்க வைத்து அவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது

HIGHLIGHTS

தற்போது பெய்த மழையினால் பயிர் சேதங்கள் கணக்கெடுப்பு: அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்
X

சென்னையில் செய்தியாளர்களிடம்  பேசியவருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

தற்போது பெய்த மழையினால் பயிர் சேதங்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் என்பதால் பயிர் சேதங்களை மீண்டும் கணக்கு எடுக்க சொல்லி இருப்பதாக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வடகிழக்கு பருவமழை குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: நேற்று இரவு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் அதிகப்படியான மழை பெய்து வருவதாகவும் நேற்றில் இருந்து பெய்த மழையின் காரணமாக சென்னையில் 220 இடங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதாகவும் இதுவரை இதில் 34 இடங்களில் தண்ணீர் வெளியேற்றி இருப்பதாக தெரிவித்தார்.மேலும் 127 பம்பு செட்டுகள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் , 46 பொக்லைன் மூலம் மண் எடுக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

நேற்று ஆவடியில் அதிகமாக 19 சென்டிமீட்டர் மழை பெய்து இருக்கிறது என்றும், தேசிய பேரிடர் மீட்பு துறை செங்கல்பட்டிலில் இரண்டு குழுக்கள் மற்றும் காஞ்சிபுரத்தில் இரண்டு குழுக்களும் உள்ளனர். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், ராணிப்பேட்டை, திருப்பூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் 124 முகாம்களில் 11329 நபர்களை தங்க வைத்து அவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது பெய்த மழையினால் பயிர். சேதங்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் என்பதால் பயிர் சேதங்களை மீண்டும் கணக்கு எடுக்க சொல்லி இருப்பதாக தெரிவித்தார்தொடர்ந்து பேசியவர் நேற்றைய தினம் மட்டும் மழையினால் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதுவரை தமிழகத்தில் 344 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும், 2205 குடிசைகள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அதேபோன்று 273 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Updated On: 27 Nov 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  2. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  5. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  6. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  7. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  8. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  9. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  10. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...