சென்னை குடிநீர் வாரிய பணியாளர்கள் 120 பேருக்கு கொரோனா தொற்று!

சென்னை குடிநீர் வாரிய பணியாளர்கள் 120 பேருக்கு கொரோனா தொற்று!
X
சென்னை குடிநீர் வாரிய பணியாளர்கள் 120 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு முன்களப்பணியாளர்கள், அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள் மற்றும் திரை பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிலர் உயிரிழந்தும் உள்ளனர்.

இந்நிலையில் சென்னை குடிநீர் வாரியத்தில் பணியாற்றி வரும் 120 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 50 பேர் குணமடைந்துவிட்டதாகவும் மற்ற 70 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
ai marketing future