Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
அதிமுக ஐ.டி பிரிவில் சிறந்த, மூன்று நபர்களுக்கு முதல் பரிசாக ரூ 2.5 லட்சம் பரிசு, தலைமை அறிவிப்பு
ஐ.டி பிரிவில் சிறந்து விளங்கும் மூன்று நபர்களுக்கு முதல் பரிசாக ரூ 2.5 லட்சம் வழங்கப்படும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
HIGHLIGHTS
இது குறித்து அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவின் வழிகாட்டுதல்படி, எதிர்பார்ப்புகளை விஞ்சும் அளவிற்கு பணியாற்றும் தலைசிறந்த மூன்று நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்.
மேலும், சிறந்து விளங்கும் பணியாளர்களுக்கு முதல் பரிசாக 2.5 லட்சமும், இரண்டாவது பரிசாக 1.5 லட்சமும், மூன்றாவது பரிசாக 1 லட்சமும் வழங்கப்படும் என்றும் இந்த பரிசுத்தொகை கழக ஒங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரால் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.