/* */

ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ், சசிகலாவுக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் பதிலளிக்க உத்தரவு

ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ், சசிகலாவுக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் பதிலளிக்க உத்தரவு
X

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், சசிகலாவுக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திண்டுக்கல்லைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் சூரியமூர்த்தி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில் அதிமுக கட்சி விதியின் படி பொதுச்செயலாளர் கட்சி உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் எனவும் இந்த விதியை திருத்த முடியாது. பொதுச்செயலாளர் பதவியை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும் பொதுச்செயலாளர் பதவியை நீக்கியது கட்சி விதிகளுக்கு முரணானது எனவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும் கட்சியின் புதிய நியமனங்கள் மேற்கொள்வதற்கு அவை தலைவர் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த சென்னை உரிமையியல் நீதிமன்றம்; அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா உள்ளிட்டோர் ஜூலை 7-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Updated On: 7 May 2021 11:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  3. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  4. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  5. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  6. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  8. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  9. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  10. ஈரோடு
    கோடை விடுமுறை கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!