Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
அத்தியாவசிய பணிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும் - சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு
தமிழகத்தில் மே 10 ஆம் தேதி முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் அத்தியாவசிய, அவசர பணிகளுக்காக 200 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. பணிக்கு செல்லும் அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பணியாளர்களுக்காக 200 பேருந்துகள் இயக்கப்படும். தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.