/* */

ஆயுத பூஜை விடுமுறை: குறைவாக கூட்டம் காணப்பட்ட கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்

சென்னை கோயம்பேடு பேருந்துநிலையத்தில் ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு வழக்கத்திற்கு மாறாக குறைவாக பயணிகள் கூட்டம் காணப்பட்டது.

HIGHLIGHTS

ஆயுத பூஜை விடுமுறை: குறைவாக கூட்டம் காணப்பட்ட கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்
X

கோயம்பேடு பேருந்து நிலையம்.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு வழக்கத்திற்கு மாறாக குறைவாக பயணிகள் கூட்டம் காணப்பட்டது.

தொடர் விடுமுறை என்பதால் சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையை கொண்டாடும் விதமாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 3,000 சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சிறப்பு பேருந்துகள் மூலம் கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்கள் சொந்த ஊர் புறப்பட்டு செல்லும் நிலையில், நள்ளிரவிலும் ஏராளமான மக்கள் சொந்த ஊர் செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்ததால் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட சற்று குறைவாகவே காணப்பட்டது.

பயணிகளின் வருகையை பொறுத்து பேருந்துகள் இயக்கப்பட்டதால் பேருந்து நிலையம் வந்த மக்கள் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் மூலம் சொந்த ஊர் புறப்பட்டு சென்றனர். கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக இந்த ஆண்டு தாம்பரம் மற்றும் பூந்தமல்லி பகுதியில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இதனால் பேருந்து இருக்கைகள் நிரம்பும் வரை ஓட்டுநர்கள் நீண்ட நேரம் காத்திருந்து வாகனத்தை எடுத்தார்கள்.

Updated On: 14 Oct 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்