/* */

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவர் கைது : விமானம் மூலம் அழைத்து வந்தனர்

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டள்ள நிலையில் மேலும் ஒருவரை தனிப்படை போலீசார் அரியானாவில் கைது செய்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

HIGHLIGHTS

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவர் கைது : விமானம் மூலம் அழைத்து வந்தனர்
X

தமிழக எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையங்களை குறிவைத்து ரூ.1 கோடிக்கு மேல் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வங்கி ஏ.டி.எம். மையங்களில் பணம் செலுத்தும் எந்திரங்களின் வாயிலாக நூதன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அரியானா மாநிலத்தைச் சேர்ந்த 10 கொள்ளையர்கள் இந்த கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றி இருந்தனர்.

திருட்டு சிசிடிவி காட்சிகளின் பதிவுகளை வைத்து சென்னை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அவர்கள் அரியானா மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் என தெரிய வந்ததையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் அரியானா சென்றனர்.

இந்த கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான அமீர் மற்றும் விரேந்தர் என்பவர்களை தனிப்படை போலீசார் ஹரியானாவில் கைது செய்து பின்னர் சென்னை அழைத்து வரப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டு போலீசார் காவலில் எடுத்து தொடர்ந்து விசாரணை நடத்தி பல்வேறு தகவல்களைத் திரட்டி வருகின்றனர்.

இந்தநிலையில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை சம்பவம் தொடர்பாக அரியானா நஜிம் உசைன் என்பரை டெல்லியில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர். இதையடுத்து தனிப்படை போலீசார் அவரை விசாரணைக்காக அழைத்துச்சென்றுள்ளனர்.

Updated On: 29 Jun 2021 12:50 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்