/* */

சென்னையில் மேலும் ஒரு பாலியல் புகார்! பள்ளி நிர்வாகத்துக்கு நோட்டீஸ்!!

சென்னை செனாய் நகரில் உள்ள பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகார் தொடர்பாக பள்ளி கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

HIGHLIGHTS

சென்னையில் மேலும் ஒரு பாலியல் புகார்! பள்ளி நிர்வாகத்துக்கு நோட்டீஸ்!!
X

சென்னையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது தொடர்பாக புகார்கள் அதிகரித்து வருகின்றன. சென்னை கே.கே.நகர் பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது முதலில் பாலியல் புகார் எழுந்தது. அவர் ஆன்லைன் வகுப்பின்போது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின்படி கைது செய்யப்பட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி 11, 12ம் வகுப்பு வணிகவியல் ஆசிரியர் ஆனந்த் மீது பாலியல் புகார் எழுந்தது. பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்த இரு விவகாரங்களும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் சென்னை செனாய் நகர் செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆசிரியர் மீது மாணவிகள் பாலியல் புகார் அளித்தனர். இதனையடுத்து அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க சம்மந்தப்பட்ட பள்ளிக்கு சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Updated On: 30 May 2021 5:16 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்