திருச்சி வணிகர் தின மாநில மாநாட்டிற்கு மு.க.ஸ்டாலினிடம் அழைப்பிதழ்

திருச்சி வணிகர் தின மாநில மாநாட்டிற்கு மு.க.ஸ்டாலினிடம் அழைப்பிதழ்
திருச்சியில் நடைபெற உள்ள வணிகர் தின மாநில மாநாட்டிற்கு முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
திருச்சி வணிகர் தின மாநில மாநாட்டிற்கு நிர்வாகிகள் மு.க.ஸ்டாலினிடம் அழைப்பிதழ் வழங்கினார்கள்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 39,வது வணிகர் தின மாநில மாநாடு மே 5 அன்று திருச்சியில் நடைபெற இருக்கிறது.இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற இருக்கிறார்.

இதனையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மாநாட்டின் அழைப்பிதழை நேரில் சென்று பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா, மாநில பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜுலு, மாநில பொருளாளர் சதக்கத்துல்லா. திருச்சி மாவட்ட தலைவர் ஸ்ரீதர் திருச்சி மாவட்ட இளைஞரணி தலைவர் அப்துல் ஹக்கீம் மற்றும் நிர்வாகிகள் கொடுத்தனர்.

Tags

Next Story