தமிழகத்தில் அடுத்த 2 மணிநேரத்தில் இடியுடன் கனமழை: சென்னை வானிலை மையம்

தமிழகத்தில் அடுத்த 2 மணிநேரத்தில் இடியுடன் கனமழை: சென்னை வானிலை மையம்
X

பைல் படம்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 மணிநேரத்திற்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுவையில் 21 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும்.



அதன்படி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், அரியலூர் மயிலாடுதுறை மாவட்டங்களில் அடுத்த இரண்டுமணி நேரம் இடியுடன் கூடிய மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
ai automation in agriculture