/* */

தமிழ்நாடு முழுவதும் அதிரடி சோதனை; ரூ.31 லட்சம் பறிமுதல்

தமிழ்நாடு முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்ட சோதனையில் ரூ.31 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

தமிழ்நாடு முழுவதும் அதிரடி சோதனை; ரூ.31 லட்சம் பறிமுதல்
X

லஞ்ச ஒழிப்புத்துறை  அலுவலகம். (பைல் படம்)

தமிழ்நாடு முழுவதும் 38 அரசு அலுவலகங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனையை மேற்கொண்டது.

சென்னை, மதுரை, நாகை, திருவண்ணாமலை, திருச்சி, அரியலூர், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, சிவகங்கை, விழுப்புரம், ஈரோடு உட்பட பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனையை மேற்கொண்டது.

சேலம் உடையாப்பட்டியில் உள்ள மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம், நெல்லை டவுன் இரண்டாம் எண் இணை சார்பதிவாளர் அலுவலகம், மயிலாப்பூர் சப்.ரிஜிஸ்டர் அலுவலகம், திருவான்மியூர் ஆர்.டி.ஓ அலுவலகம் என பல இடங்களில் இந்த சோதனை தொடர்ந்தது.

இதன் முடிவில், ரூ.26.99.335 கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தனது அறிக்கையில் தெரிவித்தது. இதன் முடிவில், ரூ.26.99.335 கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை தனது அறிக்கையில் தெரிவித்தது.

இந்நிலையில், இந்த சோதனையில் கூடுதலாக ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் கைப்பற்றப்பட்ட ஒட்டுமொத்த தொகை ரூ.31,45,055ஆக அதிகரித்துள்ளது.

Updated On: 2 Oct 2021 11:51 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  3. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  4. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  5. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  6. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  7. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  8. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  9. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  10. அருப்புக்கோட்டை
    அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளை பாராட்டிய அமைச்சர்!