/* */

ஒவ்வொரு தொகுதிக்கும் 100 ஆக்சிஜன் படுக்கைகள்: அமைச்சர் சேகர்பாபு

சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் 60 கர்ப்பிணி பெண்கள் கொரோன சிகிச்சை பெற்று வருகின்றனர். -அமைச்சர் சேகர்பாபு.

HIGHLIGHTS

ஒவ்வொரு தொகுதிக்கும் 100 ஆக்சிஜன் படுக்கைகள்: அமைச்சர் சேகர்பாபு
X

சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் 60 கர்ப்பிணி பெண்கள் கொரோன சிகிச்சை பெற்று வருகின்றனர் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் ஆகியோர் எழும்பூரில் அமைந்துள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர் சேகர்பாபு,

வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். இங்கு இருக்கக்கூடிய தாய் சேய் இருவரும் பாதுகாப்பாக இருக்கும் நிலையில் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது, கழிப்பறைகள் மிக சுத்தமாக வைக்கப்பட்டுள்ளது, தேவைப்படும் கழிவறை வசதிகளை உடனடியாக செய்து தரப்படும்..

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் 100 ஆக்சிஜன் படுக்கைகளை தயார் செய்து வருகிறோம். இன்னும் ஒரு வார காலத்தில் தமிழக முதல்வர் அதை துவக்கி வைப்பார் என்றார். மூன்றாவது அலை குழந்தைகள் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. அதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், அவர்களுக்கு தேவைப்படும் படுகைகளை தயார் செய்யுமாறு அறிவுரை வழங்கி உள்ளோம்.

7000 பெட்டிகள் வழங்கி இருந்தார்கள் அதை அதிகரித்து தர வேண்டும் என தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். இதனையொட்டி 50 ஆயிரம் பெட்டிகள் கூடுதலாக வந்து சேர்ந்துள்ளது தினமும் 20 ஆயிரம் பெட்டிகள் தருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் 60 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பத்து குழந்தைகளும் உள்ளனர், எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் வசதி இல்லை அதனை ஏற்படுத்த உள்ளோம் அதற்காக ஒரு மாத அவகாசம் ஆகும். என்று தெரிவித்தார்.

Updated On: 19 May 2021 4:24 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  2. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  3. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  6. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  7. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  8. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  9. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  10. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!