சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.37 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.37 லட்சம் தங்கம் பறிமுதல்
X

துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி கொண்டு வரப்பட்ட ரூ.37 லட்சம் மதிப்புடைய 773 கிராம் தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

துபாயிலிருந்து ஏா்இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு விமானம் இன்று காலை சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா்.அப்போது சிவகங்கையை சோ்ந்த ஹைதா்அலி(23) என்ற பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி சோதனையிட்டனா்.

அப்போது அவருடைய உள்ளாடைகளுக்குள் 3 சிறிய பாா்சல்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனா். அந்த பாா்சல்களை பிரித்துப் பாா்த்தபோது, அதனுள் தங்க பேஸ்ட் இருந்தது.அதன் மொத்த எடை 773 கிராம் என கூறப்படுகிறது.அதன் சா்வதேச மதிப்பு ரூ.37 லட்சம் என கூறப்படுகிறது.இதையடுத்து பயணியை சுங்கத்துறை கைது செய்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags

Next Story
ai in future agriculture