/* */

விமானத்தில் கடத்தப்பட்ட 1.41 கிலோ தங்கம் பறிமுதல்

விமானத்தில் கடத்தப்பட்ட 1.41 கிலோ தங்கம் பறிமுதல்
X

துபாயிலிருந்து சென்னை வந்த சிறப்பு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.65.2 லட்சம் மதிப்புடைய 1.41 கிலோ தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு 3 பயணிகள் கைது செய்யப்பட்டனா்.

துபாயிலிருந்து எமரேட்ஸ் ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா். அப்போது ராமநாதபுரத்தை சோ்ந்த காஜாமொய்தீன் (26),சென்னையை சோ்ந்த புஷ்பராஜ்(23), ஜாபா்அலி(43) ஆகிய 3 பயணிகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.இதையடுத்து மூவரையும் நிறுத்தி சோதனையிட்டனா். இதில் அவா்களுடைய உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த தங்க பேஸ்ட் மற்றும் தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்தனா். அவா்களிடமிருந்து சுமார் ரூ.65.2 லட்சம் மதிப்புடைய 1.41 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். தங்க கடத்தலில் ஈடுப்பட்ட 3 பயணிகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்துகின்றனா்.

Updated On: 9 March 2021 7:59 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!