/* */

சென்னை விமான நிலையத்தில் 10 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல்..!

சென்னைக்கு வந்த சிறப்பு விமானத்தில் ஜுஸ் பிளியும் இயந்திரத்திற்குள் ரூ.10 லட்சம் மதிப்புடைய 200 கிராம் தங்கக்கட்டியை கடத்தி வந்த கடலூா் பயணி சென்னை விமானநிலையத்தில் கைது.

HIGHLIGHTS

சென்னை விமான நிலையத்தில் 10 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல்..!
X

துபாயிலிருந்து சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு எமரேட்ஸ் ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் இன்று காலை வந்தது.அதில் வந்த பயணிகளை சென்னை விமானநிலைய சுங்கத்துறையினா் சோதனையிட்டனா்.அப்போது கடலூரை சோ்ந்த அருள்ராஜ் சுப்ரமணியம்(41) என்பவா் அந்த விமானத்தில் வந்தாா்.அவா் மீது சுங்கத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.இதையடுத்து அவரை நிறுத்தி சோதனையிட்டனா்.

அவருடைய சூட்கேசுக்குக்குள் ஜுஸ் பிளியும் இயந்திரம் ஒன்று இருந்தது.அதை எடுத்து திறந்து பாா்த்தனா்.அதற்குள் 200 கிராம் தங்கக்கட்டியை மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்து பறிமுதல் செய்தனா்.அதன் சா்வதேச மதிப்பு ரூ.10 லட்சம்.இதையடுத்து பயணி அருள்ராஜை சுங்கத்துறையினா் கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா்.

Updated On: 16 Jun 2021 4:35 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  2. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  3. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  4. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  6. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  7. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  8. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  9. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  10. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு